கல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2



கல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன்.


உண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்..! அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்!


சரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை!

இப்ப முதல்ல...கல்வியை எடுத்துக்குவோம்.

இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு! அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இருக்கு! அதுவும் பாடாவதியா இருக்கு! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அதுலயும் சீட் இல்லைன்னு நான் அரசு பாலிடெக்னிக்கில் போய் படிச்சேன். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை! எங்க ஏரியாவுலயே எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கு! எவ்வளவு குறைவா மார்க் எடுத்திருந்தாலும், ஏதாவது ஒரு கல்லூரியில் கண்டிப்பா சீட் கிடைச்சுடும். ஆக, உயர்கல்வி இன்றைய மாணவர்களுக்கு சுலபமாயிடுச்சு!

அரசாங்கமே, எல்லாக்கல்லூரிகளையும் ஆரம்பிக்கணும்னு காத்திருக்க ஆரம்பிச்சோம்னா, பல நடுத்தரக்குடும்பங்கள்ல, இன்னும் 10 வருஷம் ஆனாலும் ஒரு இஞ்சினியரையும் பாக்க முடியாது. அரசாங்கம் செய்யாததை...தனியார் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! ஆனா இந்த கல்லூரி நடத்துறதை தொழிலாக்கினவுங்க யாருன்னு பாத்தா.. தன்னிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சின பணத்தை வெள்ளையாக்கும் முயற்சில இருக்கும் கனவான்கள்தான்! அவுங்க எந்த நோக்கத்துக்காக பண்ணியிருந்தாலும் கல்வி ன்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா அது ஒரு விதத்தில் பிரமிக்கவும், பாராட்டவும் தக்க வளர்ச்சிதான். ! இப்படி நிறைய தனியார் கல்லூரிகள் இருந்ததாலதான் நிறைய IT இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வசாதாரணமா கொடுக்க முடியுது!

இந்தியாவிலேயே கர்நாடகாவிலும், தமிழகத்திலும்தான் தனியார் கல்லூரிகள் அதிகமா இருக்கு! அதுனால நிறைய நல்லதும் நடக்குது! எழுத்தறிவில் 100 சதவீதம்னு சொல்லிக்கிற கேரள மாநில மாணவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டு தனியார் கல்லூரிகள்லதான் படிக்கிறாங்க! ஆக, தனியார் கல்லூரிகளால் கல்வியின் தரம் உயர்ந்திருக்குங்கிறதை மறுக்க முடியாது.
பல தனியார் கல்லூரிகள் தங்கள் தரத்தால், இந்த மாநிலத்துக்கே நல்ல பேரை வாங்கிக்கொடுத்திருக்கு! பல கல்லூரிகளோட பேரைச்சொன்னாலே பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வில் உடனே consider பண்றாங்க! சில கல்லூரிகளின் கேம்பஸ் தேர்வுகளில் எல்லா மாணவர்களுக்குமே வேலை கிடைச்சிருக்கு! அதனால், இந்தக்கல்லூரிகள் இல்லைன்னா கண்டிப்பா தமிழ்நாடு இந்த அளவுக்கு கல்வில வளந்திருக்க முடியாது.

இந்தக் கல்லூரிகளை நாடித்தான் நம்ம பசங்க படிக்க வராங்க! இந்தக் கல்லூரிகள் கேக்கும் கட்டணத்தை கட்டத்தான் பசங்க வங்கிகளை நாடுறாங்க!

ஆக்சுவலா, வங்கிகள் என்ன பண்ணுது?

மறுபடியும் தொடரும்தான்....!

Comments

  1. கோபியை கேட்டதாகச் சொல்லுங்கள் என்று சொல்ல மறந்துவிட்டேன். நிங்க மறக்காம கேட்டதாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. தொடரும்.

    ReplyDelete
  3. வாங்க தலைவா! கண்டிப்பா தொடருவோம்.

    ReplyDelete
  4. தமிழ்நாட்டுக்கு இத்தனை இன்சினியரிங் கல்லூரி தேவையா?

    முதல் பாகத்துல ஒரு கமெண்ட் போட்டேன் அதே கமெண்ட்தான் இந்த பாகத்துக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !