கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்


இரு வாரங்களுக்கு முன்பு நீயா? நானா? வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன்.

மாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க!

வங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க!

கடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா
கொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' ! அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இதை நினைக்கக்கூடாதுன்னு முடிச்சார்.


இந்த கல்விக்கடன் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஆழமா சிந்திக்கவும், அது சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட விசாரிச்சு, கருத்துக்கேட்கவும் ஆரம்பிச்சேன்.

முதல்ல.. நான் சிந்திச்சது.. இது கொஞ்சம் ராவா இருந்தாலும்...இதில் அந்த ஹியூமன் கன்சிடரேஷன் இருக்கிறமாதிரிப் பாத்துக்கிட்டேன்.

1. இன்னிக்கு உலக நாடுகள், இந்தியாவின் கலாசார மாற்றங்களை கவனிச்சுப்பாத்துக்கிட்டே வந்து அதுக்கேத்தமாதிரி சந்தைக்கடையை விரிக்கிறாங்க! அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க! அதே சமயம் , நம்ம கலாசார விஷயங்களையும் தொட்டுக்கிறாங்க...!

உதாரணமா... பீஸா , பர்கர் உணவுகள், க்ரெடிட் கார்டுகள் போன்றவை...அவுங்க கலாச்சாரம்.

சோனி ப்ளேஸ்டேஷன்ங்கிற - யாரோடயும் பழகவோ பேசவோ தேவையே இல்லாம, வூட்டுக்குள்ளயே யாரைவேனாலும் அடிக்கலாங்கிற -விளையாட்டுல இப்ப புதுசா கபடி, கில்லியெல்லாம் வந்திருச்சு! - இதுமாதிரி விஷயங்கள் நம்ம கலாசாரத்தை புகுத்துறது. ஆனா இதுலயும், நம்ம கலாசார விளையாட்டிலேயே அவன் குடுக்குற கேம்ஸ் ரூலைத்தான் நம்ம பசங்க கடைபிடிப்பாங்க!
இந்த வகையில் உருவானதுதான்.. எதுக்கெடுத்தாலும் கடன் குடுத்து இந்தியனை கடனாளியாக்கும் பழக்கம்.! ஆனா சேமிச்சு, அதில் செலவு பண்ணி வாழ்க்கை நடத்துறதுதான் நம்ம கலாச்சாரம்னு இன்றைய தலைமுறைக்கு மறந்துபோய் ஒரு மாமாங்கமாயிடுச்சு!

2. கல்வி - மேலை நாடுகள்ல எனக்குத்தெரிஞ்சு ஓவரா தனியார்க்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா..அது இந்தியா அளவுக்கு தனியார்வசம் இருக்கான்னு விபரம் தெரிஞ்ச நண்பர்கள் சொன்னாங்கன்னா உதவியா இருக்கும். ஆனா.. இன்னிக்கு மனசாட்சிக்கு பயந்து கல்விக்கூடம் நடத்துறவுங்க மிகக்குறைவானவர்கள்தான். அதுவும் இதுல சம்பாதிக்க வேண்டியதில்லைன்னு, நடத்துறவங்களால எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா..இதை ஒரு முழுத்தொழிலா நடத்தும் புண்ணிய...ஸாரி பாவவான்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை! அவுங்க நடத்துற காலேஜ்களை நம்பித்தான் இன்னிக்கு இந்தியாவோட உயர்கல்வியே இருக்கு!

3. முதல் ரெண்டு பாயிண்ட்டும் சேரும் இடம்தான் கல்விக்கடன்....அதாவது.. நல்லாப்படிக்கிற ஒரு ஏழைக்குடும்பத்துப்பையனோ, பொண்ணோ மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா.. அரசாங்கம் குறைவான இடமே ஒதுக்குறதால, ஏதாவது ஒரு மொக்கையான தனியார் கல்லூரிக்கு கவுன்சிலிங்கிற பேர்ல தள்ளிவிடப்படுவாங்க! அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க! அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள்! அதாவது...இவுங்க கல்விக்கடனா குடுக்குற காசை வாங்கி அந்த தனியார் காலேஜ் மொதலாளிக்கிட்ட குடுத்துட்டு இவுங்க கடனாளியா நிக்கணும். அவர் தான் காலேஜ் கட்டுறதுக்காக வாங்கின கடனை அதை வச்சுக்கட்டிப்புட்டு ஜாலியா திரிவாரு!

இதுல எங்க இருக்கு மாணவர் நலன்?

இன்னும் இதில் பல்வேறு கோணங்கள் இருக்கு! ஒரேயடியா ஒரு தரப்பை குத்தம் சொல்ல முடியாது..!


(தொடரும்)

Comments

  1. தல,
    பதிவு ரொம்ப குழப்பமா இருக்கு :(.. என்ன சொல்ல வரீங்கன்னே புரியலை :(..

    ReplyDelete
  2. நீயா நானாவில் போலித்தனம் அதிகமாய்டிச்சிங்க.. பாக்கறதே இல்லை..

    ReplyDelete
  3. வாங்க சந்தோஷ் ஜி!

    உங்களை குழப்பினதுக்கு மன்னிக்கணும்... :)

    அதாவது..கல்வி தனியார் மயமானதும், வங்கிகள் கடன் கொடுத்து இந்தியர்களை மயக்கினதும்....

    கல்விக்கடன் உருவாகக்காரணம்னு சொல்றேன்.

    தனியார் கல்விக்கூடம் கேக்குற பணத்தை, வங்கிக்கிட்ட கடனா வாங்கி மாணவன் குடுத்துற்ரான். இப்ப கடனாளி யாரு? மாணவன். பலன் யாருக்கு ? தனியார் கல்லூரிக்கு? இதைத்தான் சொன்னேன்.

    நான் சொன்ன விதத்தில் எங்கயோ தப்பு இருந்திருக்கு போல! :)

    ReplyDelete
  4. சஞ்சய் வாங்க!

    இங்க மேட்டர் நீயா? நானா? இல்லை!

    அதில் எடுத்துக்கிட்ட விஷயம்..!

    அதுனால தைரியமா இதைப்பாக்கலாம்.. :))

    ReplyDelete
  5. /இங்க மேட்டர் நீயா? நானா? இல்லை!

    அதில் எடுத்துக்கிட்ட விஷயம்..!

    அதுனால தைரியமா இதைப்பாக்கலாம்.. :))/
    ரொம்ப சரி!பதிவு தெளிவா இருக்கே!

    ReplyDelete
  6. கல்விக்கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் திரும்ப கட்டுவதில்லை அதனாலேயே எந்த தனியார் வங்கியும் கல்விக்கடன் குடுக்க முன்வருவதில்லை.

    கல்விக்கடன் வாங்கீட்டு கட்டாதவங்கள எல்லாம் சிபில் லிஸ்ட்ல ஏத்தி நாளைக்கு அவனுங்க எவ்வளவு பெரிய ஆளா வந்தாலும் networth எவ்வளவு இருந்தாலும் வீட்டுலோன் / கார் லோன் வேற எந்த லோனும் வாங்கமுடியாத அளவுக்கு செய்யனும் இல்லைனா பேங்க் எல்லாம் திவாலாகி முக்காடு போட்டுகிட்டு போக வேண்டியதுதான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !