Showing posts with label ஓமப்பொடி. Show all posts
Showing posts with label ஓமப்பொடி. Show all posts

Tuesday, February 26, 2013

ஓமப்பொடி # 9



    


       உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால், நமது இரத்த அழுத்தம், அளக்கும் கருவியின் பாதரசம் வெடித்து வெளிவரும் அளவுக்கு எகிற வைக்கிறது.

     பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களின் சிரமத்தை வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு, தனக்கான செலவினங்களில் ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ளாமல், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அலுவலர்களுக்கான சலுகைகளை மட்டும் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறது. இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மத்திய நிதி அமைச்சகத்தில், மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
    பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கும்போதும், எண்ணெய் நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலைவாசியை வைத்து, விலையை மாற்றும்படி அரசை நெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அரசு அவர்களது பெட்ரோலிய வரி வசூலில் இருந்து ஒரு பகுதியை மானியமாக அளித்து, சமாளித்திருக்கிறார்கள். இப்போது, தனது வரி வசூலில் ஒரு பைசா கூட தரமுடியாது என்று அரசு முடிவெடுத்ததால்தான், எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இவையும் முழுமையான தனியார் நிறுவனங்கள் கிடையாது. ஆகவே அரசு சார் நிறுவனங்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே , இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். இதில் இரண்டு தரப்புமே கயவர்கள்தான் என்றார்.

இதில், ஹைலைட் என்னவென்றால், கடந்த மாதத்தில், எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு அகவிலைப்படிச் சலுகைகளும் , பயணப் படிகளும் அதிகரித்திருக்கிறார்களாம். அதற்கான நிதியாக சுமார் 12.4 கோடி ரூபாய் ஒதுக்கிக்கொண்டு நிதி அமைச்சகத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் காரணம்..

”பெட்ரோல் ,டீசல் விலை உயர்வினால், பயணப்படி அதிகரிக்கிறோம்!”

அட நாசமத்துப் போவாய்ங்களா!!

 ***************************************************************************

விஸ்வரூபத்தைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை? கமல் படத்தில் வேலைபார்த்தவர் என்ற அடக்கமா? அல்லது பிடிக்கவில்லையா? அதைப்பற்றி எதுவும் குறையாக எழுதிவிடக்கூடாது என்ற பயமா? பாராட்டி எழுதினால், மற்றவர்கள் உங்களை ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்ற ஐயமா? என்று சில நண்பர்கள் மெயிலிலும், நேரிலும் கேட்டுவிட்டார்கள்.

     எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதனை விவரித்து எழுதத் தோன்றவில்லை. தோன்றினால் எழுதுவேன். அவ்வளவுதான்! தசாவதாரத்துக்கும் நான் விமர்சனம் எழுதவில்லை. மேலும், கமலஹாசனையும், அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருப்பதாக உணர்கிறேன். அவரது தொழில் அறிவும், அதன்மீது கொண்ட ஈடுபாடும் எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவருடன் இரண்டு நாட்கள் வேலைபார்த்தால் அது உண்மையில் தெரியவரும். அவரது படைப்பை வைத்து காவடி ஆடுபவர்களுக்கு, அவரது தொழில் பக்தியை, அடுத்தவர்களைப்பற்றி அதிகம் மூக்கைச் சொறிந்துகொள்ளாமல், தன் வேலையில் கவனமாக இருப்பதைக் கற்றுக்கொள்ளச் சொல்லவேண்டும் என்று ஆசை! சினிமாவில், மேன்மையும் , மேலாண்மையும் தெரிந்த மிகச் சொற்பமான மனிதர்களில் கமல் முதன்மையானவர் என்பது என் தாழ்மையான கருத்து!

இந்த விஷயத்துக்காக, ரூம் போட்டு , என் மூளைக்குள் அமர்ந்து , அதற்காக யோசித்த நண்பர்களின் அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் நினைத்து பெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறேன். :)

************************************************************************

இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த நண்பர்கள் சந்திப்பில்,  இன்றைய மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அதன் அவலங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அன்று காலை 10 மணிக்கு விஜய் டிவியில், ‘என் தேசம் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியில், நண்பர் கோபிநாத் மருத்துவத்துறையின் அவலங்களைப் புட்டுப் புட்டு வைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மருந்தின் தயாரிப்பு, வியாபாரத்துக்குப் பின்னால், எப்படி நோயாளிகளிடம் மருத்துவர்கள் காசு பிடுங்குகிறார்கள் என்று சொன்னார்கள். அமீர்கானின் ‘சத்யமேவ ஜெயதே’ யின் தமிழ் வடிவம்தான் என்றாலும், மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாகப் பட்டது. இதுபோன்று சமூகத்தின் அவலங்களைப் பற்றி அலசி, விழிப்புணர்வு தூண்டும் நிகழ்ச்சிகளைக் கொடுக்கத் தொடங்கினால், தொலைக்காட்சி என்றாலே சினிமாதான் என்ற எண்ணம் இன்றைய குழந்தைகளுக்கு வருவதைத் தவிர்க்கலாம். இன்னும் பேசுவதற்கு நிறைய தலைப்புகள் இருக்கின்றன.

கல்வி அராஜகங்கள், வேலைப் பிரச்னைகள், தொழில் சிரமங்கள், குடும்ப அமைப்பின் தோல்விகள் என்று சொல்லிக்கொண்டே போகமுடியும். அனைத்தையும் நிச்சயம் தொடுவார்கள் என்று நம்புவோம். அதன் தயாரிப்பு நிறுவனமான மெர்குரி நெட்வொர்க்கின் திரு.சாய்ராம் மிகச் சிறந்த சிந்தனையாளர். அவர்போன்ற மனிதர்கள் மீடியாவில் இருப்பதால்தான் ஓரளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன. என் தேசம் என் மக்கள் குழுவுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !

*********************************************************************

    ஒரு சாஃப்ட்வேர் நண்பன் சொந்தக் கிராமத்துக்கு ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருக்கிறான்..

ஒரு பெரியவர் ‘என்னடா வேலை பாக்குற?’ என்று கேட்டிருக்கிறார்.

”சாஃப்ட்வேர்” என்றிருக்கிறான்.

“ம்..சரி” என்று சொன்னவர்.. கொஞ்ச நேரம் இவனிடம் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வந்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் அந்த ஊரில் பல ஆண்டுகளாக சிற்றுண்டி விடுதி வைத்திருக்கிறார் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்!

விழா முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது, அவரது கடையின் முன்னால்தான் பேருந்துக்கு நிற்கவேண்டும்.

அப்போது அவர் அவனிடம் வேகவேகமாக ஓடிவந்து கேட்டிருக்கிறார்..

”தம்பீ! ஏதோ சாப்டுவேரு கடைல வேல பாக்குறேன்னியே!... அங்க ஒரு நாளைக்கு எத்தன சாப்பாடு ஓடும்?”

செத்தான் சிவகிரி!  :)




Saturday, December 29, 2012

விஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..



     
    விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான், ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.

    உண்மையிலேயே, தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.! அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டேயிருந்தால், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்திகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதான் காலத்தின் கட்டாயம்.

    திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக, நீ வேறு எங்கும் படத்தை ஒளிபரப்பக்கூடாது என்று வம்பிழுப்பது முட்டாள்தனம். திருட்டு டிவிடிக்குக் காரணமே இவர்கள்தான். தியேட்டர்களிலிருந்துதான் பிரிண்ட் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அதுவும், கேமராவில் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஒலியை மட்டும் நேரடியாக DTS மிக்ஸரிலிருந்து திருடித்தான் டிவிடி வருகிறது. அந்தத் திருட்டை ஒழிக்க வக்கில்லாத திரையரங்கு உரிமையாளர்கள், நேர்மையாக ஒரு மனிதன் வேறு முறையில் மக்களிடம் தன் படைப்பைக் கொண்டு சேர்த்தால், குதிப்பதில் நியாயமே இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு டிவிடி வராது என்று உறுதி அளிக்க இயலாத பட்சத்தில் , கமலின் வியாபரத்தில் தலையிட அருகதையே கிடையாது.

    உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

கமல் சார் நீங்க செய்வது சரிதான்..! நீங்க முன்னாடி போங்க! …பின்னாடியே வரோம். அவங்களும் வருவாங்க!
_______________________________________________________________

     எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு விளையாட்டு உலகம் இருக்கிறதாம். அங்கும் கார்டு சிஸ்டத்தைக் கொண்டுவந்து அதில் 20 ரூபாய் வசூலித்து அடாவடி செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்திய உணவு அல்லது பொழுதுபோக்குச் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இவர்களது உள்கணக்கு வசதிகளுக்காக வாடிக்கையாளர்களை அடாவடி செய்கிறார்கள். இந்த முறை மொத்தமாகப் போய் கேட்கலாம் என்று எண்ணம். இவர்கள் செய்யும் அநியாயத்தை நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். இதற்காக தேவதூதன் யாரும் பிறந்து வந்துவிடமாட்டான். இது போன்ற சாத்தான்களுக்கு நாமே போதும்.!! கரம் கோர்க்க விரும்புபவர்கள் kettaalkidaikkum@gmail.com க்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள். தேதியும் நேரமும் தனியே அறிவிக்கப்படும்.


ஒன்று மட்டும் நிச்சயம்.. தன்னெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
___________________________________________________________________________


       ஜெயா ப்ளஸ்ஸில் கற்றல் அழகு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில். ஒவ்வொரு மேற்படிப்புத் துறைகளின் உண்மையான தன்மையை ஆராய இருக்கிறது. உதாரணமாக, ஏரோநாட்டிக் பொறியியல் படித்தால், பைலட் ஆகலாம் என்று பரவலாக எண்ணம் இருக்கிறது. ஆனால், அது படித்தால், விமான உற்பத்தி அல்லது பழுதுபார்த்தலில்தான் வேலை கிடைக்கும். அதுவும் அதனுள் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று ஒன்று உள்ளது. அது படித்தால், செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்குபெறலாம். அதுதவிர ஏவியானிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. அது படித்தால் மட்டுமே, விமான கட்டுப்பாட்டுக் கருவிகள்  தயாரிப்பில் பங்கெடுக்கமுடியும். இதில் முதுகலைப் படிப்புகள் முடித்தவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறு படிப்புகளைப் பற்றியும், அதன் பாடத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு பற்றிய உண்மைத் தகவல்களை அந்தக் கல்லூரிகளுக்கே சென்று , செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். ஒளிபரப்பு நாளும், நேரமும் விரைவில்…


வரும் திங்களிலிருந்து, மக்கள் தொலைக்காட்சியில், காலை 8:48க்கு ஒளிபரப்பாகும் ஊருக்கு உரைப்போம் என்ற நிகழ்ச்சியில், சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கன்ஃப்யூஷியஸ், லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள், வீரத்தேவன் வரலாறு போன்றவை அடக்கம்..  அது அறிமுகமா,? படுத்தலா? என்று பார்த்தபிறகுதான் தெரியும்.

Wednesday, November 21, 2012

ஓமப்பொடி # 7





கேட்டால் கிடைக்கும் என்று பல நண்பர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் P.B. பாலாஜியின் வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்த குப்பையை எடுக்க, மேயருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றார். செய்துகொடுத்தேன். அவரே அனுப்பி, உடனே காரியமும் நடந்திருக்கிறது. மேலும் அதிகாரிகளும் வீட்டுக்கே வந்து பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதில் நண்பர் கேபிள் சங்கரும் அவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். கேட்டால் கிடைக்கும் என்று பிரபலங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.
  -----------------------------------------------------------------------------------------------------------------------------


நிகழ்வுகள் நம்மை செதுக்குகின்றன என நம்புகிறேன். சமீபத்திய வெவ்வேறு நிகழ்வுகள், என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. துக்கப்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்படுத்தியிருக்கிறது. அவமானப்பட வைத்திருக்கிறது. ஆவேசப்படவைத்திருக்கிறது. ஆனால், அவை மொத்தமும் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை! (மொத்தத்தில் நிறைய ‘படுத்தியிருக்கிறது! J )

ஆனால், மகிழ்ச்சிப்படுத்திய தருணங்கள்தான், உள்ளத்தை குப்பைத் தொட்டியாக்காமல் பாதுகாக்கிறது.

ஆரோகணம் – திரைப்பட விரும்பிகளால் வெகுவாக இரசிக்கப்பட்டு, ஆனந்தவிகடனில் 44 மதிப்பெண்கள் வாங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு..!! ஏனெனில் ஜூலை 2011ல் ஒரு மாலை நேரத்தில் ஹோட்டல் ரெஸிடென்ஸி டவர்ஸின் உணவகத்தில் அமர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் கதை சொன்னார். அன்றிலிருந்து, அந்தக் கதையில் பயணிக்கிறேன். பை-போலார் எனப்படும் மனச்சலனம் பற்றி விவாதிக்கிறோம். விறுவிறுவென்று வேலைகள் நடக்கின்றன. கதை விவாதம் – நடிகர்கள் தேர்வு- தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு என்று அனைத்தும் நிகழ்கிறது. படப்பிடிப்பு அதிவேகமாக நிறைவடைகிறது . அப்போதுதான், அதே விஷயத்தை மையமாக வைத்து, 3 என்ற படம் வெளிவருகிறது. ஆனால், அதில் முழுமையாக எதிர்மாறாக காட்டியிருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் ஆசுவாசமாகிறது. மீண்டும் பல்வேறு பட்டை தீட்டல்களுக்குப்பிறகு 100 நிமிடப்படமாக ‘ஆரோகணம்’ வெளிவருகிறது. அதில் கதை நாயகியாக நடித்திருந்த விஜி அவர்களின் வாழ்நாள் சாதனையாக இதனைக் கொள்ளலாம்.

அதில், ஒரு சிறு கதாபாத்திரமாக என்னையும் காட்டியிருக்கிறார்கள். அந்த அன்புக்காக, இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


இந்தப்பாடல் எல்லோராலும் இரசிக்கப்பட்டது. இந்தப்பாடலில் நானும் காட்டப்பட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் கே வுக்கும், பாடலைப் பாடிய ‘ஷாரதா இராமகிருஷ்ணனுக்கும் பாராட்டுக்கள். (ஷாரதா, இயக்குநரின் மகள்) மேலும், ஆரோகணத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்ற வாரம் நடந்தது. அதிலும் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வாக இருந்தது.


மக்கள் தொலைக்காட்சியில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10:30க்கு ’புதிய இலக்கு’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இணையத்தில் எனது நம்பிக்கை உரைகளைக் கேட்டுவிட்டு, நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னை அணுகினார்கள். அதன்படி, அந்த நிகழ்ச்சியில், நம்பிக்கைச் சொல் என்ற தலைப்பில், நம்பிக்கை விஷயங்களும், ‘முத்தாய்ப்பாக’ என்ற தலைப்பில் வேலை பற்றிய சில புள்ளிவிபரத் தகவல்களும் பகிர்ந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி, வேலை தேடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாகவும், நிறுவனங்கள் புதிய ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று விளக்கும் களமாகவும் இருக்கிறது.
அதிலிருந்து மாதிரிப் பகுதி!!




 ஜெயா குழும டிவியில் எனது நெறியாள்கையில் ஒரு நிகழ்ச்சி வர இருக்கிறது. அது இப்போதைக்கு புதிராகவே இருக்கட்டும். வரும்போது பார்க்கலாம்.



பால் தாக்கரே இறப்புக்கு – கதவடைப்பு பற்றி இணையத்தில் கருத்துச் சொன்ன பெண்களை கைது செய்து ஜாமீனில் விட்டிருக்கிறது போலீஸ். ஆனால், அவர்களைக் கைது செய்ததே தவறு என்று எதிர்ப்புக்குரல் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. இங்கும் பல சம்பவங்கள் அதுபோல நடக்கின்றன. இதுபோல எது எழுதினாலும் வம்பு வரும் என்றால், ஒன்று மக்கள் இணையத்தில் எழுத அஞ்சுவார்கள். அல்லது -இணைய எழுத்தாளர்கள் ஒன்றிணைந்தால் - கட்டாயம் இணைய கருத்து முடக்கத்துக்கெதிரான புரட்சி வெடிக்கும்..! எனக்கென்னமோ இரண்டாவது நடக்குமோ என்று தோன்றுகிறது.


Tuesday, June 19, 2012

ஓமப்பொடி # 6





இடையில் எதுவுமே பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது தெரியவில்லை.

சென்ற மாதம்  ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன. நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப் பேசியிருக்கிறார்கள். இவர்களும் போராடிப்பார்த்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதுதான்… நமது பேரீச்சை கதையைப் படித்துவிட்டு..ஷர்புதீன் இந்த நிறுவனத்தை என்ன செய்வது என்று கேட்டார். என்னிடம் முழு விபரங்களும் கொடுத்தார்.

உடனே, கோவையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு தொலைபேசினேன். அதன் மேலாளர் ராஜேந்திரனிடம்.. வாடிக்கையாளரை முட்டாளாக்கினால் என்னன்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னேன்’. மேலும் நமது கேட்டால் கிடைக்கும் அமைப்பு பற்றியும்.. நான் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்பதையும் சொல்லி, அவர்களுக்கு ஸ்டவ்வை மாற்றிக்கொடுக்கும்படியும் சொல்லி வைத்தேன்.

அதற்குப் பிறகு 8 நிமிடங்களில், ஷர்புதீனின் நண்பரிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்தது.

‘சார்..அந்த ஸ்டவ் கம்பெனிலேருந்து ஃபோன் வந்துருச்சு சார்!  உடனே ஸ்டவ்வை எடுத்துக்கிட்டு வந்து மாத்திக்கச் சொல்லிட்டாங்க சார்! நான் எத்தனை தடவை போய் சத்தம் போட்டும், சரியா பதில் சொல்லாம அலட்சியப்படுத்திக்கிட்டிருந்தாங்க! நீங்க பேசினதுக்கப்புறம் இப்படி பவ்யமா பேசுறாங்க! ரொம்ப நன்றி சார்! ஆமா..அப்படி என்ன சார் சொன்னீங்க?” என்றார்.

’உண்மையைச் சொன்னேன்’ என்றேன். :)

ஆம். ஒரு வாடிக்கையாளரின் உரிமையை தெளிவாக , ஆத்திரப்படாமல், அழுத்தமாகக் கேட்கும்போது…கண்டிப்பாக கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் ஒருவரது பிரச்னையை இன்னொருவர் தட்டிக்கேட்கும்போது….தவறு செய்யும் வியாபாரிக்கு…’’ஆஹா..ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா’ என்ற எண்ணம் வருவதால்தான் காரியம் நடக்கிறது.

நிச்சயம் ஒன்று கூடுவோம்.


டாட்டா நானோ,- கார் வாங்குவதற்காக, டாட்டா ஃபைனான்ஸ் என்று அவர்களே கடன் தரும் நிறுவனமும் வைத்திருக்கிறார்கள்.

நானே கடன் தரேன். நானோ வாங்கிக்க!’ என்று ஸ்லோகன் வைக்கலாம்!

அதில் நான் கார் வாங்கும்போது , முன் பணமாக 30000 கட்டவேண்டும். மிச்சத்தை மாதத்தவணையாக பிரித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்காக 9 செக்குகள் தரவேண்டும் என்றார்கள். சரி என்றேன். மூன்றில் தொகையை பூர்த்தி செய்துகொள்ளலாம். மற்ற 6 செக்குகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல், கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுக்கவேண்டும் என்றார்கள்.

ஆரம்பித்தது பிரச்னை!

இந்திய அரசியல் சட்டத்திலயோ, இந்திய நிதிச் சட்டத்திலயோ, யாராவது யாரிடமாவது பூர்த்தி செய்யப்படாத செக் கொடுக்கலாம்னு இருக்கான்னு காட்டுங்க ! என்றேன்.

பதில் சொல்லத்தெரியவில்லை..
நான் கண்டிப்பாக ப்ளாங்க் செக் தரமாட்டேன். என் தவணைத்தொகையை பூர்த்தி செய்துதான் கொடுப்பேன் .. இல்லைன்னா.. நீங்க 6 ப்ளாங்க் செக் குடுக்கணும்னு டாட்டா ஃபைனான்ஸ் லேருந்து எனக்கு ஒரு லெட்டர் வாங்கிக்கொடுங்க என்றேன்.


அப்போது லேசாக ஜகா வாங்கினார்கள்.

உடனே நானே, 9 செக்குகளையும் தவணையைப் பூர்த்தி செய்தே கொடுத்துவிட்டேன். அதை வாங்கிக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு டாட்டா நிதி அலுவலர் என்னிடம் தொலைபேசினார்.

சார்! என்ன நீங்க எம்ப்டி செக்கே குடுக்காம விட்டுட்டீங்க? அப்படின்னா உங்களுக்கு கார் கிடைக்காது சார்!

சுர்ரென்று ஏறியது.

எம்ப்டி செக்குதானே வேணும் ? பத்து செக்குகூட தரேன். ஆனால் கையெழுத்தும் இருக்காது பரவாயில்லையா?

அப்புறம்..கார் கிடைக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? கார் வாங்க லோன் கிடைக்காதுன்னு சொல்ற வரைக்கும்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கு! அப்ப நீங்கதான் நானோவும் விக்கிறீங்களா? வி.எஸ்.டி மோட்டார்ஸ் கிடையாதா?
என்று சொல்லவும்..

அந்த ஆள் தடுமாற ஆரம்பித்தார்.

இப்ப சொல்லுங்க..!! உங்க பேச்சை ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். டாட்டா ஃபைனான்ஸில் நானோ கார் வாங்க கடன் வாங்கணும்னா, ப்ளாங்க் செக் குடுக்கணுமா? அப்படி கொடுத்தால், ப்ளாங்க் செக் வாங்கியிருக்கேன்னு நீங்க லெட்டர் குடுப்பீங்களா என்றேன்.

பப்பப்பா…பப்பராப்பா..!! என்று ஆர்யா, அமலாபால் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் ஒரு நீண்ட மின்னஞ்சல் ஒன்றை , டாட்டா ஃபைனான்ஸின் தலைமைக்கு அனுப்பினேன்.
அலறிக்கொண்டு அடுத்தநாள் மதியம் , அதே அதிகாரி போன் செய்தார். என்ன சார் நீங்க பாட்டுக்கும் மேல எல்லாம் எழுதிட்டீங்க? உங்க லோன் பேப்பரை நேத்திக்கே ‘நான்’ அப்ரூவ் செஞ்சுட்டேன் சார்..!! சும்மா ஒரு செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக செக் வாங்குவோம் சார்! நீங்க பணம் கட்டாம விட்டுட்டீங்கன்னா அதை பவுன்ஸ் பண்ணி உங்களை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் என்றார்.

அதெப்புடி? செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக, என் சொந்தவீட்டுப் பத்திரத்தைக் கொடுத்துத்தான் கார் வாங்கணுமா? என்று கேட்டுவிட்டு,, எவ்வளவு ரூபாய் போட்டு செக் கொடுத்தாலும்..அதை வச்சு என்னை கோர்ட்டுக்கு இழுக்கலாம். அதைவிட ஒரு மேட்டர் புரிஞ்சுக்குங்க..!! ஏமாத்துறவந்தான் நீங்க சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டு, கேக்குற செக்கெல்லாம் குடுப்பான். ஏமாத்தாதவன் இப்படித்தான் கேள்விகளா கேட்டு ஒழுங்கா பணத்தை கட்டுவான் என்றேன்.

இப்படியாக, இந்த நீதியே தெரியாமல் நிதி உதவி செய்யும் நிறுவனங்களின் ஆட்டத்துக்கு நடுவே, ஒரு ப்ளாங்க் செக் கூட கொடுக்காமல், நான் நானோ வாங்கிவிட்டேன்.

அடுத்து இன்னொரு கூத்து நடந்தது..!!

வாரக்கடைசில சொல்றேன்.

சென்ற மாதம் வட இந்தியப்பயணம் இனிதே நிறைவுற்றது.
இந்தியாவே சூடாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. அதுவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்ற நரகம் – தெளிவாகத்தான் தட்டச்சினேன். நகரம் அல்ல..! நரகம்தான்..!! காலை4:40க்கெல்லாம் விடிந்து…இரவு 8 மணிவரை கதிரவன் வேலை  பார்க்கிறான். அதுவும் பகல் 12 மணிக்கு…வெளியில் 40 அடி நடந்திருப்பேன். நிழலைப்பார்த்து ஓடிவிட்டேன். இன்னும் 40 அடி நடந்திருந்தால், சுருண்டிருப்பேன். உண்மையான வெய்யிலை அங்குதான் அனுபவித்தேன். சவுதி அரேபியாவின் பாலைவன வெப்பத்தை விட அதிகமாக இருந்தது.

மரங்களை வெட்டுவதையே பிழைப்பாக வைத்திருந்தால், சென்னைக்கும் அந்த கதி வரும் நாள் தூரத்தில் இல்லை என்றே படுகிறது.


இந்தியாவில் அனல் மின் நிலையங்கள்தான் அதிகமாக உள்ளன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயம் இருக்கிறது. மின் உற்பத்தி என்று நாம் சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். அதன் பின்னணியில் எத்துனை இளைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்று நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. சம்பளத்துக்காத்தான் வேலைபார்க்கிறார்கள் என்று சாதாரணமாக புறம் தள்ளிவிடமுடியாது. அனல் மின் நிலையம் ஒரு வினாடி நின்றால் கூட, மீண்டும் அதனை உடனே இயங்க வைக்க இவர்கள் பல நாட்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியுள்ளது. உற்பத்தி, தேவை என்ற இரு பல்சக்கரங்களுக்கிடையில் இவர்களும் அரைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்

என்றோ வரப்போகும் போருக்காக, நம் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருக்கும் வீரர்களை விட… தினமும் நம் வீட்டில் விளக்கெரிய, அந்த அனல் காற்றில் போரிடும் இந்த இளைஞர்கள்தான் வணங்கப்பட வேண்டியவர்கள்! ஒவ்வொருமுறை மின்சாரத்தை வீணடிக்கும்போதும் இதை நினைவில் கொள்ளலாம்.! யாரோ ஒரு இளைஞனின் தூக்கத்தை நாம் களவாடிக்கொண்டிருக்கிறோம்
                   ___________________________________

ஷங்காய் என்ற ஹிந்திப்படம் பார்த்தேன்..நிதர்சனத்தை அப்படியே சொன்ன விதமும்.. உண்மையின் குரூரமும் தூங்கவிடாமல் செய்தது. ஷங்காய் என்றால், ‘தவறு செய்யத் தூண்டுவது’ என்று பொருள் வரும். 

உண்மைதான்.. ஒருவனை தவறுசெய்ய என்னவெல்லாம் தூண்டுகிறது. அரசு என்பது எவ்வளவு பெரிய அராஜக வாதிகளால் நிரம்பியிருக்கிறது என்று அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
‘நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என்று லக்கிலுக் எழுதியிருக்கிறார். உண்மைதான்.!! 
கேபிளின் விமர்சனம் படித்துத்தான் படத்துக்குப் போனேன். !!
முக்கியமான விஷயம்..சென்னையில் இந்த மல்டிப்ளெக்ஸ்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது. !! ஆம்..!

பானிப்பட் சினிமேக்ஸில் ஒரு டிக்கட் 50 ரூபாய்தான்..!! 

டிக்கட் விலையை கண்டுக்காம இருந்துட்டு அப்புறம் தமிழ் சினிமா வாழலைன்னு அடிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்.? 

அங்கயும் ஒரு பாயாசத்தைப் போட்டுறவேண்டியதுதான்..!!

Thursday, May 3, 2012

ஓமப்பொடி # 5




     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்..

கையெழுத்துப் பயிற்சி,
கலர் அடிக்கும் பயிற்சி,
காசு எண்ணும் பயிற்சி,
பூஜை செய்யப் பயிற்சி,
புத்தகம் படிக்கும் பயிற்சி,
பாட்டுப்பாடும் பயிற்சி,
படம் வரையப் பயிற்சி,
பறவை பார்க்கப் பயிற்சி
போட்டோ எடுக்கப் பயிற்சி,
முதலுதவிப் பயிற்சி,
பொருள் அடுக்கப் பயிற்சி
இசை கேட்கப் பயிற்சி
இசை வாசிக்கப் பயிற்சி
சதுரங்கப் பயிற்சி
சக்கரக்கால் பயிற்சி
சோறு உண்ணப் பயிற்சி
யோகா பயிற்சி
அபாக்கஸ் பயிற்சி

என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள்.

இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது. 

 விடுமுறையில் வில்லனாகும் பெற்றோரை எப்படி கதற விடலாம்  என்று சிந்தித்துக்கொண்டே சிறார்கள் சாலையைக் கடப்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு பள்ளிக்கூடமே தேவலை.. இந்த லீவு விட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் வண்ணம் டார்ச்சரை அனுபவிக்கிறார்கள்.

 பெற்றோரின் ஒரே பிரச்னை.. ஒரு மாசம் வீட்டில் இருந்தால், வீடே ரெண்டு செய்வார்களே என்றுதான்.!! அதற்குத்தான் பிள்ளைகள். ! அதை சகிக்கும் வகையில் ஆக்கிக்கொள்ளும்போதுதான் நம் வாழ்வு இனிக்கும்.! அதைவிடுத்து பயிற்சியில் சேர்த்தே கொல்லும் கலாச்சாரம் பயமுறுத்துகிறது.

நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.

அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது இருக்கட்டும்..! குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

********************************************************************
சென்ற மாதத்தில் கன்னாபின்னாவென்று வேலை ! மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை பின்னுவதிலும், ஒரு புத்தகம் எழுதுவதிலும் ஆழமாகக் கழிந்தது. இதற்கிடையே பயிற்சி வகுப்புகள் வேறு!

மே ஒன்றாம் தேதி. .தொழிலாளர் தினத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் சரியாகப்பயன்படுத்தவில்லை என்ற விவாதத்தில் பங்கெடுத்தேன். சுவாரஸ்யமாகச் சென்றது.
     என் வாதம் இப்படி இருந்தது. : அரசு தொழிலாளர்களுக்கான நடைமுறைகளையும், உரிமைகளையும் வகுத்த்துக்கொடுத்துள்ளது. அதை நியாயமான முறையில் கேட்டுப்பெற தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. ஆகவே நிர்வாகங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அதற்காக ஒட்டுமொத்த நிர்வாகங்களையும் குறை சொல்வதற்கில்லை. சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் சிறப்பாக நடத்துகின்றன என்று பதிவு செய்தேன். தொழிலாளர்களை போலீஸ் அடிக்கிறது என்ற வாதத்துக்கு, அவர்களும் ஒரு வித தொழிலாளர்கள் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களால் சங்கம் தொடங்கமுடியாது என்றேன். முக்கியமாக எதையுமே கேட்டால் கிடைக்கும் என்று வலியுறுத்தினேன். கம்பேனி விளம்பரத்தை அப்புறம் எப்படித்தாம்பா செய்யுறது என்று நினைத்தாலும்.. ஒரு உண்மை பரவட்டுமே என்றுதான்..

அடுத்து வரும் வாரங்களில் ஒரு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நான் பங்குபெற்ற சந்தித்த வேளை நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

*******************************************************************



   நானோ , யாரோ அந்தக்காரை வாங்கியிருந்தாலும், உடனே ’ஓ..அதுவா?’ என்று கேட்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது. ஆம்.. அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள். உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது. ஆட்டோ போல் குறுகிய பாதைகளில் ஓட்ட முடிகிறது. ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மைலெஜும் 20 வருகிறது. பப்பாளி ஆரஞ்சு வாங்கியிருக்கிறேன். பெயர்தான் நானோ என்று இருக்கிறதே ஒழிய.. கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை. ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்!

காரில் பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது. அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
             *******************************************************************
வாயுதூதனின் வாஞ்சையால், சென்னையில் மின்வெட்டு இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது.. என்று அவர் பீஸைப்பிடுங்குவார் என்று தெரியவில்லை. அரசு செய்யததை இயற்கை செய்கிறது….. இப்போதுகூட அதைப் புரிந்துகொள்ளாவிட்டால்….சுனாமிதான்..!


               *******************************************************************

மே மாதத்தில் 7 ம் தேதியிலிருந்து 20 நாட்கள் வட இந்தியப் பயணம், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், ராஜஸ்தான் என்று பல்வேறு மாநிலங்கள்… பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள்! ஒரே வேலை! பயிற்சி வகுப்புகள்..!!
வாணலியிலிருந்து தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J  

நான் அவர்களைச் சொன்னேன்.. !




Thursday, March 22, 2012

ஓமப்பொடி # 4


               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.com இணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!






        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...