இந்த வாரம் முழுமையும்
எது எழுதினாலும் ரசித்து
குறைகளோடு ஏற்று,
வந்திருந்து வாழ்த்தி,
அன்புகாட்டி அசத்தி,
என்னுள்ளம் கொள்ளை கொண்ட
பதிவுலக நண்பர்களுக்கு
பணிவான நன்றிகள்!
திடீரென்று இன்பம் தந்து
திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த
தமிழ்மண நிர்வாகத்திற்கு
தலைவணங்கி நன்றிகள்!
இனியென் எழுத்தில்
ஏதேனும் மாற்றத்தை
இயன்றவரை கொண்டுவந்து
எடுத்திருக்கும் நற்பெயரை
எப்போதும் தக்கவைப்பேன்.!
வாசிப்பில் வளர்ந்தாலும்
வாசிக்கும்படி வளர்வது
பதிவுலகம் எனக்குத்தந்த
பரிசாக எண்ணுகிறேன்!
சென்ற ஏழுநாட்களும்
எனக்கு வாரமல்ல!
வரம்!
Monday, February 22, 2010
Sunday, February 21, 2010
புதுக்கோட்டை
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்
மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!
இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!
நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.
பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.
நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்

பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!

கீழ ராஜ வீதி.

புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....

புதிய அரண்மனையின் மேலிருந்து...

நகராட்சிக்கட்டிடம்.
மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!
இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!
நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.
பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.
நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!
கீழ ராஜ வீதி.
புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....
புதிய அரண்மனையின் மேலிருந்து...
நகராட்சிக்கட்டிடம்.
யான்பு அல் சினைய்யா
ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.!
சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன்.
அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது.
சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்றே நிறுவியிருக்கிறது. அவை ஜுபைல் மற்றும் யான்பு..அப்படி 1970களின் இறுதியில் நிர்மானிக்கப்பட்ட யான்புவில்தான் நான் குடியேறினேன். யான்பு அல் பஹார் என்பது நகரத்தின் பெயர். அதாவது கடற்கரையிலுள்ள யான்பு அல்லது துறைமுக யான்பு! அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா! அதாவது தொழிற்பூங்கா யான்பு!
சாலைகளும், கட்டிடங்களும் எனக்கு பிரமிப்பூட்டின. இப்படி ஒழுங்காக இருக்கமுடியுமா என்று ஏங்க வைத்தன. யான்புவிலிருந்து கிளம்பும் சாலையில் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும், சாலை முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. யான்பு அல்சினைய்யா. இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. Yanbu Light Industries Park, Yanbu Industrial College. LIP யில்தான் அனைத்து தொழிற்சாலைகளும், இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், கடல்நீரைக்குடிநீராக்கும் நிறுவனமும் அமெரிக்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மணல் மாபியா என்று தூத்துக்குடி பக்கம் டாட்டாவுக்கும், இன்னொரு .....ராஜன் (பெயர் நினைவில்லை) என்பவருக்கும் முட்டிக்கொண்டு பிரச்னையானதே , அந்த டைட்டானியம் டை ஆக்ஸைடுதான்!
மக்களில் பாதிக்குப்பாதி வெளிநாட்டவர்கள். ! இந்தியா,இலங்கை , வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மக்கள்தான் அதிகம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாளாக வந்து வேலைபார்க்கும் ஆண்கள்தான்.! சொற்ப அளவிலான பெண்கள் தாதிகளாகவும், வீட்டு வேலைக்கும் வந்திறங்கியிருப்பார்கள்.
அவர்கள் தேசத்திலும், ஆண்டாண்டு காலம் வாழ்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வந்தேறிகள் ஆட்சிசெய்யும் ஒரு அவல நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது பெரிய அளவில் வெளிவரவில்லை. காரணம், மன்னராட்சி..சுமுகமாக, மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணம் நடந்துகொண்டிருப்பது.!ஆதி அரேபியர்களை பதூ.. என்று அழைப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒட்டகம் வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.
மக்களைப்பொறுத்தவரை, வெளிநாட்டவரைப் புகழ்வதும் இல்லை . இகழ்வதும் இல்லை. சமமாகத்தான் பாவிக்கிறார்கள். நம் ஆட்கள் செய்யும் சேட்டைதான் அவர்களை கோபப்பட வைத்துவிடுகிறது.
மக்கள் அனைவரும், சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டுவிடுவார்கள். ஆளில்லா சாலையில் கூட சிக்னலை மீறும் சௌதிக்கள் மிகக்குறைவு. எல்லா விஷயங்களிலும் ஒரு ஒழுங்கை இங்குதான் நான் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும் நேரம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிந்ததும் இங்குதான்.
பெரிய அதிகாரிகளை நேரடியாகப் பெயர்சொல்லி அழைக்கலாம். தவறில்லை என்று கற்றுக்கொண்டதும் இங்குதான். (நமக்குத்தான் சார்..சார்.. என்றே கூப்பிட்டுப்பழகிவிடுகிறது)
அதிவேகமாகக் கார் ஓட்டி முன்னூறு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்ததும் இங்குதான்!
யான்புவில்தான் நான், பில்லியர்ட்ஸ் ஆடக்கற்றுக்கொண்டேன். செஸ்ஸில் பல உயரங்களை எட்டினேன். பிலிப்பினோ மாஸ்டர் திரு. மெலிட்டன் டெலா க்ரூஸிடம் கராத்தே கற்றுக்கொண்டேன்.
நிறைய வாசித்தேன். அதைவிட நிறைய நிறைய படம் பார்த்தேன். நிறைய நண்பர்களைப்பெற்றேன். மலையாளம், உருது, அரேபிய மொழிகளும், வங்காள , பிலிப்பினோ மொழிகளில் கொஞ்சமும் கற்றுக்கொண்டேன்.
விடுமுறையில், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா என்று எகிப்திய நகரங்களைச் சுற்றிவந்தேன். கெய்ரோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று....இன்று நான் தொடர்ந்து குருதிக்கொடை கொடுப்பதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது.(அது இன்னொரு சமயம்..)
என் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது.
பொதுவாக சௌதிக்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லை என்று ஒரு எண்ணமுண்டு. சில நேரங்களில் அது உண்மையென்பதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒருமுறை முட்டாள்தனம் செய்த ஒரு சௌதி நண்பனிடம் பேசிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் கேட்டேன்.
ஏண்டா..நீங்க கொஞ்சம் மந்தமாவே இருக்கீங்க? சில சமயங்களில் அடி முட்டாளா இருக்கீங்க?
அதற்கு அவன் சொன்னான்.
நாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா? உங்க பொழைப்பு நாறியிருக்கும்...!
வாஸ்தவமான பேச்சு! :)
அறந்தாங்கி
என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)
என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!
காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.
நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!
வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!
பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.
எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!
என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!
காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.
நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!
வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!
பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.
எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!
Saturday, February 20, 2010
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர்! என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர்.
நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை!
அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.!
அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது!
தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான்! இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ்! விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை! கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்!
அந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை! குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..? :) )
என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்!
அடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்!
அது இன்னொரு நாளில்.....
நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை!
அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.!
அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது!
தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான்! இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ்! விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை! கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்!
அந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை! குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..? :) )
என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்!
அடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்!
அது இன்னொரு நாளில்.....
பொருள் ஒழுங்கு!
நம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும்! மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில்
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்!
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம்.
ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு!
செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோம்.
செய்ரின்னா தேவையில்லாததை அகற்று! இதுதான் ரொம்ப முக்கியமான அம்சம். நாம் எங்காவது வெளியூர் போயிட்டு வந்தா அந்த பஸ் அல்லது ரயில் டிக்கெட் இன்னபிற காகிதங்களை அப்படியே வைப்போம். அதேபோல் பல்தேய்க்கும் பேஸ்டிலிருந்து, முக க்ரீம் வரை எல்லாப்பொருட்களின் அட்டைப்பெட்டியையும் அங்கங்கே போட்டு வைத்திருப்போம். ஒரு கட்டத்தில் தேவையில்லாத பொருட்கள் நிறைஞ்சு போய் தேவையான பொருட்களை தேட வச்சுடும்.ஒரு பொருள் வாங்கினா அதன் ரசீதை ஓரிடத்தில் பத்திரப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு, அந்தப்பொருள் ரிப்பேரானா அதற்கான வாரண்ட்டிக்காக நாம் அந்த ரசீதைத்தேடும்போது வீடே அமளி துமளியாகும். ஒரு காலகட்டத்தில் நாம் தேடவேண்டிய பொருளின் அடையாளம் கூட மறந்து போயிருக்கும்.!
இப்படித்தான் மொக்கச்சாமி ஒரு கடைக்கு டிவி வாங்கபோனார். உள்ளே நுழைஞ்சதும் இடதுபுறம் பார்த்துட்டு...இந்த டிவி என்ன விலை? ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர்.! அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை? ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா! ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை? ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்..! என்ன மொக்கச்சாமி! எத்தனை தடவை சொன்னாலும் கேக்கமாட்டேங்குற! உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு! அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்கவே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு! கடைக்காரர் சொன்னாரு! உன்னைத்தவிர வேற எந்த முட்டாளும் இத்தனை தடவை மைக்ரோ வேவ் ஓவனைப்பாத்து டிவி ன்னு நினைச்சு விலை கேட்டதில்லை...ஒரு பொருளை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத உனக்கெதுக்கு டி.வி ன்னார் ! இப்படி இருந்தா அப்புறம் எப்படி விளங்கும்?
நமக்கு பொருட்களை அடையாளம் வச்சு இனங்கண்டு ஒரு ஒழுங்கா வைக்க பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தினசரி அதை ஒரு நடவடிக்கையா செஞ்சுக்கிட்டிருந்தாலே போதும். ஜப்பானிய 5எஸ் இதைத்தான் சொல்லுது!
செய்ட்டன்னா — தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கிறதுதான் அடுத்தது !
தேவையில்லாததை கழிச்சுக்கட்டிட்டாலே தேவையானதை சுலபமா ஒழுங்குபடுத்திடலாம். எது தேவையில்லாதது?ங்கிறதுதான் பெரிய கேள்வி..! இதுக்கு ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லும் பதில்தான் நல்லா இருக்கும். நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!! ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ! அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க!
வீட்டை , அலுவலகத்தை ஒழுங்கா வச்சுக்குறது ஒரு கலை! நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா..! அதை ஒழுங்கா வச்சிருக்கலாமோன்னு தோணும். மேலும்
நாளைலேருந்து மிகச்சரியா வச்சுக்கணும்னு திட்டம்போடுவோம். ஆனா அடுத்த நாளும் அதே பொருளைத்தேடுவோம். இப்படி தினசரி பைக் சாவி தேடும் வீடுகள் நம் நாடு முழுதும் இருக்கு!
தேவையானவற்றை ஒழுங்குபடுத்த, அலுவலகம் மாதிரியே வீட்டிலும் கோப்புகளைப்பயன்படுத்தலாம். எல்லாப்பொருட்களுக்கும் அடையாளப்பெயர் ஒட்டி வைக்கலாம். வீட்டில் உள்ள சின்னவர்களையும்
அப்படியே பழக்கலாம். வீடா மியூசியமான்னு கேட்கப்படும் கேள்விக்கு ஒரு பதில் இருக்கு! மியூசியம்... பார்வைக்கு! ஆனால் வீடு...பயன்ப்டுத்த ! ஆக அடுக்குவதுதான் சிறந்தது.
இந்த ஒழுங்கின் வெற்றி என்னவா இருக்கணும்னா.. வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு பொருளையும் அடுத்த பத்துவினாடிகளுக்குள் கையில் எடுக்க வைக்கணும். தளராமல் இதைச்செய்து
வெற்றியும் அடுத்த பத்துவிநாடிகளுக்குள் உங்களை அடைய என் உளமாரந்த வாழ்த்துக்கள் !
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்!
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம்.
ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு!
செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோம்.
செய்ரின்னா தேவையில்லாததை அகற்று! இதுதான் ரொம்ப முக்கியமான அம்சம். நாம் எங்காவது வெளியூர் போயிட்டு வந்தா அந்த பஸ் அல்லது ரயில் டிக்கெட் இன்னபிற காகிதங்களை அப்படியே வைப்போம். அதேபோல் பல்தேய்க்கும் பேஸ்டிலிருந்து, முக க்ரீம் வரை எல்லாப்பொருட்களின் அட்டைப்பெட்டியையும் அங்கங்கே போட்டு வைத்திருப்போம். ஒரு கட்டத்தில் தேவையில்லாத பொருட்கள் நிறைஞ்சு போய் தேவையான பொருட்களை தேட வச்சுடும்.ஒரு பொருள் வாங்கினா அதன் ரசீதை ஓரிடத்தில் பத்திரப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு, அந்தப்பொருள் ரிப்பேரானா அதற்கான வாரண்ட்டிக்காக நாம் அந்த ரசீதைத்தேடும்போது வீடே அமளி துமளியாகும். ஒரு காலகட்டத்தில் நாம் தேடவேண்டிய பொருளின் அடையாளம் கூட மறந்து போயிருக்கும்.!
இப்படித்தான் மொக்கச்சாமி ஒரு கடைக்கு டிவி வாங்கபோனார். உள்ளே நுழைஞ்சதும் இடதுபுறம் பார்த்துட்டு...இந்த டிவி என்ன விலை? ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர்.! அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை? ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா! ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை? ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்..! என்ன மொக்கச்சாமி! எத்தனை தடவை சொன்னாலும் கேக்கமாட்டேங்குற! உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு! அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்கவே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு! கடைக்காரர் சொன்னாரு! உன்னைத்தவிர வேற எந்த முட்டாளும் இத்தனை தடவை மைக்ரோ வேவ் ஓவனைப்பாத்து டிவி ன்னு நினைச்சு விலை கேட்டதில்லை...ஒரு பொருளை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத உனக்கெதுக்கு டி.வி ன்னார் ! இப்படி இருந்தா அப்புறம் எப்படி விளங்கும்?
நமக்கு பொருட்களை அடையாளம் வச்சு இனங்கண்டு ஒரு ஒழுங்கா வைக்க பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தினசரி அதை ஒரு நடவடிக்கையா செஞ்சுக்கிட்டிருந்தாலே போதும். ஜப்பானிய 5எஸ் இதைத்தான் சொல்லுது!
செய்ட்டன்னா — தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கிறதுதான் அடுத்தது !
தேவையில்லாததை கழிச்சுக்கட்டிட்டாலே தேவையானதை சுலபமா ஒழுங்குபடுத்திடலாம். எது தேவையில்லாதது?ங்கிறதுதான் பெரிய கேள்வி..! இதுக்கு ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லும் பதில்தான் நல்லா இருக்கும். நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!! ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ! அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க!
வீட்டை , அலுவலகத்தை ஒழுங்கா வச்சுக்குறது ஒரு கலை! நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா..! அதை ஒழுங்கா வச்சிருக்கலாமோன்னு தோணும். மேலும்
நாளைலேருந்து மிகச்சரியா வச்சுக்கணும்னு திட்டம்போடுவோம். ஆனா அடுத்த நாளும் அதே பொருளைத்தேடுவோம். இப்படி தினசரி பைக் சாவி தேடும் வீடுகள் நம் நாடு முழுதும் இருக்கு!
தேவையானவற்றை ஒழுங்குபடுத்த, அலுவலகம் மாதிரியே வீட்டிலும் கோப்புகளைப்பயன்படுத்தலாம். எல்லாப்பொருட்களுக்கும் அடையாளப்பெயர் ஒட்டி வைக்கலாம். வீட்டில் உள்ள சின்னவர்களையும்
அப்படியே பழக்கலாம். வீடா மியூசியமான்னு கேட்கப்படும் கேள்விக்கு ஒரு பதில் இருக்கு! மியூசியம்... பார்வைக்கு! ஆனால் வீடு...பயன்ப்டுத்த ! ஆக அடுக்குவதுதான் சிறந்தது.
இந்த ஒழுங்கின் வெற்றி என்னவா இருக்கணும்னா.. வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு பொருளையும் அடுத்த பத்துவினாடிகளுக்குள் கையில் எடுக்க வைக்கணும். தளராமல் இதைச்செய்து
வெற்றியும் அடுத்த பத்துவிநாடிகளுக்குள் உங்களை அடைய என் உளமாரந்த வாழ்த்துக்கள் !
Friday, February 19, 2010
அய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு!
ஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம்.
பின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த
எழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது!
பதிவுலகில் அது அப்படியே வேறு கோணம்! முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பாடாய் அவரது படைப்புகள் எந்த அச்சு ஊடகத்தில் வந்தாலும் வாழ்த்துத்தெரிவித்து மகிழ்வோம். அதுவே இன்னும் கொஞ்சம் உயர்ந்து, அவர் ஒரு படைப்பை நூலாக வெளியிடுகிறார் என்றால், அதற்கு சக பதிவராக, நண்பராக எல்லா ஊக்கங்களும்
கொடுத்து, அந்தப் படைப்பை உலகறியச்செய்வோம். அதனால் அவர்கள் சுமாரான படைப்புகளைத் தந்துவிடவும் முடியாது.அப்படி ஒரு நட்புச்சாரலில் பூத்த மனோரஞ்சிதப்பூக்கள்தான் இந்தப் புத்தகங்கள்!
நண்பர்கள் நிறையப்பேர் அலசியிருந்தாலும்...என்னிடமுள்ள நகல்கள் சொன்னவற்றை... இதோ!
நர்சிம்மின் அய்யனார் கம்மாவில் ஒரு கலவையான உணர்ச்சித்தாண்டவம் ஆடியிருக்கிறார்.
தலைப்புக்கதையின் கடைசி இரு வரிகள் - நெடுஞ்சாலைத்திருப்பத்தில் திடீரென வரும் தண்ணீர் லாரி!
தாயுமானவன் - //சுடுகாட்டுக்குத் தெலுகு வார்த்தைக்கு எங்கே போவேன் என்று கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக்கொண்டே ..நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் காட்டி, புதைப்பதற்கு என்று செய்கையில்....// அழுதேவிட்டேன் அய்யா!
திகட்டத்திகட்டக் காதலி - காதலில் இவ்வளவு திறமையாக வெல்லமுடிவது வரம்! எஸ் எம் எஸ் ரகசியங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது.
செம்பட்டைக்கிழவி - // முக்கியமாய், வாட்சு கட்டிக்கொண்டிருக்கும் கையை உடலைவிட்டு சற்றுத்தள்ளி வைத்துக்கொண்டும் நடக்கும் அன்றாட மக்கள் // காட்சிப்படுத்தினால் சிரிப்பு வரவழைக்கும், அவர் கவனம் தெரிகிறது.
ஞாபகமாய் ஒரு உதவி - யாருக்கெல்லாம் இப்படி வாக்குக்கொடுத்தோம் , அவர்கள் என்ன ஆனார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
ம'ரணம்' - // கார்த்திக் கிளினிக். சற்று சுத்தமாக இருந்தது. சத்தமாகவும் தான் // வார்த்தை விளையாட்டு அழகு!
சந்தர்ப்பவதம் - // திலீப் எப்படி இருப்பான் என்று ஒரு பாரா வர்ணிப்பதைவிட ஏதாவது ஒரு டிவி சீரியலில் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழும் ஏதாவது ஒரு கதாநாயகனை நினைத்துக்கொள்ளுங்கள் // - என்னா ஒரு லந்து! கொஞ்சம் சுஜாதாவும், நிறைய நர்சிம்மும் வந்துபோகிறார்கள்.
தலைவர்கள் - சூழல் சித்தரிப்பும், தயாரிப்பும் செய்து கலக்கியிருக்கிறார்.
மனக்குரங்கு , தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப்பொட்டி என வெவ்வேறு களங்களில் கிராமம், நகரம் என்று வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.
இதில் நான் எதிர்பார்த்து..இல்லாமல் போன கதை ஒன்றுண்டு.. மோட்டிவ் இல்லாமல் கொல்லும் மோட்டிவ் கொண்ட கொலைக் கதை! ஆ.வியில் வந்தது. ஏன் பாஸ் விட்டுட்டீங்க?
பொதுவாக இந்தக்கதைகளில் ஒரு சில வர்ணனைகள் அந்த காட்சியை ஒரு திரையில் ஓடவிட்டுக்காட்டுகின்றன. ஒரு சில வார்த்தை விளையாட்டுகளான வசனங்கள் அவரது இயல்பான நகையுணர்வை மீட்டுகின்றன. எல்லாவிதமான கதைகளிலும் தன்னால் களம் அமைக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். 'நறுக்' என்ற நர்சிம்..!
அய்யனார் கம்மாவில் நிழல் தருவதற்காக ஒதுங்கியதுதான் இந்த சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்!
காமத்தை கொல்ல நினைத்தாலே அது இன்னும் பல்கிப்பெருகும் என்பதுதான் உண்மை! அதுபாட்டுக்கும் கெடந்துட்டுப்போகுது கழுதை என்றோ, அதுவும் மகிழ்வான தருணங்களைத்தரும் ஒரு உணர்வே என்றோ மதித்தோமென்றால், அதுவும் சும்மா இருக்கும்! நமது வேலையும் கெடாது.
எனக்குத்தெரிந்த ஒரு அன்பான இயக்குநர் எழுதிய கவிதையின் சாரம் இது...
கலவியால்தான்
எல்லோரும் பிறந்தோம் என்று
நண்பன் சொன்னபோது
எங்கள் பெற்றோர் மட்டும்
நல்லவர்கள் என
எண்ணியிருந்தேன்
அடுத்த குழந்தை வீட்டில்
பிறக்க அவர்கள்
எடுத்த முயற்சியை
அன்றொரு இரவில்
கண்டபோது
அதிர்ந்தேபோனேன்.
யாருடைய காமம், எங்கு விதைக்கப்படுகிறது. எங்கு அறுக்கப்படுகிறது என்று சில கதைகளில் சங்கர் நாராயண் கதாபாத்திரங்கள் மூலமாக விளாசியிருக்கிறார். முத்தத்தில் ஆரம்பித்து ,தலைப்புக்கதை வரையில் பல இடங்களில் பெண்ணும் , மதுவும் கதாபாத்திரங்களுக்கு போதையளிக்கிறார்கள். சில இடங்களில் போதனை அளிக்கிறார்கள்.
துரை..நான்..ரமேஷ் சார்! சூப்பர்! ராஜியை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சு மனைவி கையால தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போடணும் ஜி!
என்னைப்பிடிக்கலையா? - அதிர்ச்சியாகவும், கோபமாகவும், படித்தவர்கள் உணர்ந்தாலும், சமூக ஆர்வலனாகவும் , குடும்பநல ஆலோசகனாகவும் இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். இன்று இது பல்கிப்பெருகியிருக்கிறது. இந்துஸ்தான் லீவர் உயரதிகாரியின் மனைவிக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர் பாய் போதும்! கடைசிவரிகள் யதார்த்த சிந்தனையின் வீச்சு!
தலைப்புக்கதையில் சொல்லப்படும் பாடல்களை சும்மா எழுதியிருக்க வாய்ப்பில்லை. தன் திறன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்.!
காமம் கொல்! - சூப்பரான கதை! சாமியாரின் மனநிலைக்கு யார் காரணம்! இதைத்தான் ஓஷோ சொல்றாரு! அவரைப்போய்......!
மாம்பழ வாசனையின் தீவிரம் ஒரு ரகமென்றால், நண்டின் , கணவன் மனைவி அன்பு ' நான் அவனில்லை' என்று ஆசிரியரைக் கத்த வைத்திருக்கிறது.
மொத்தத்தில் கேபிள் சங்கர் என்று உலகத்தாரால் அறியப்படும், வருங்கால சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயில் வீசிய எல்லா வாசனைகளும் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கொடுத்திருப்பதுதான்.! சிலருக்கு நுகர மட்டும் விருப்பம்! சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க! இவருக்கு நுகர்ந்ததைப் பரப்ப!.....
இப்படியாக நான் எழுதுவதே டைரிக்குறிப்புதான்....என்னுள் நட்பாகத்தோன்றி நானாகவே மாறிவிட்ட பரிசலின் தொகுப்பை முதலில் படித்த கர்வம் எனக்கு ஏறியிருப்பதால்..அனைவரும் அதற்கான என் பார்வையை...புத்தகம் வாங்கி முன்னுரையில் படியுங்களேன்....நான் எப்படி எழுதினாலும்..என்னை நானே வாழ்த்திக்கொள்வதுபோல் தோன்றும். அப்படித்தானே பரிசல்?
ஒரே ஒரு திருத்தம் அதில் :
//ஒவ்வொரு கதையிலும் தன் பரிமாணத்தையும், வாசிப்பின் ஆழத்தையும் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். தனிமை-கொலை-தற்கொலை , தலைப்பே கவிதையாக இருக்க, தனிமை இரு மனிதர்களை எப்படி முடிவெடுக்க வைக்கிறது என்று அழகுபடக்கூறியிருக்கிறார். இந்தக்கதையில்..
'தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? ' என்று ஒரு இடம் வருகிறது. சில விஷயங்களை எழுத்தில் கொண்டுவரமுடியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த 'மெ து வா க ' என்ற வார்த்தை ! இதைப்படிக்கும்போதே தாமரை மலர்வதை நாம் மெதுவாக உணரலாம். வார்த்தைகளில் காட்சியமைக்கும் திறன் மிகவும் அற்புதம்!//
இந்த வரிகளில் ...மெ து வா க என்பது மெதுவாக என்று அச்சிடப்பட்டுவிட்டது. அதனால் நான் சொன்னதன் அர்த்தம் புரியாமல் போகலாம். பிழை பொறுத்து படித்துச்சொல்லுங்கள்!
வாழ்த்துக்கள் நூலாசிரியர்களே...! நன்றிகள் பதிப்பகத்தாரே!
Subscribe to:
Posts (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்த...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...