Saturday, November 26, 2011

ட்விட்டுரை





பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு 


தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது. ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது

காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார். சுரேகாத்துவம்!


சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல? - தங்கமணி! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது? - #அடி தாங்கலை!


என்னது? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு!! இது வேறயா? #கலைஞனுக்கும் ஜாதி உண்டு!


அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும். புதல்வனின் புரோட்டா வெறிக்கு........முடியலை!


பெரிய கடைகள் புறக்கணித்து...சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம். உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது.


காசும், கண்ணியமும் கொடுத்தால், கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்.. பிரம்மாண்டமாய்களில்...!


இளைய தலைமுறை படிக்கட்டும்னு அய்யா நினைச்சார்..இல்லை.. மொதல்ல படுக்கட்டும்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க! #இனிமே ஓட்டுப் போடுவ?


நல்லவேளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலெல்லாம் லிட்டர் கணக்கில் விக்கலை! இல்லைன்னா திருக்குறள் இன்னிக்கு என்னா விலை விக்கும்?


நம்மை ஏதோ காமக்கொடூரன்போல் பாவித்து ஒரு பாதுகாப்புக்காக என்றெண்ணிஅண்ணாஎன்று அழைப்பவர்களை எப்படிக் கொன்றால் தகும்?


கடினமாக உழையுங்கள். ஆனால், குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். செத்தால் எவனும் நமது PPT நினைவு கொள்வதில்லை.


பிச்சை: ஒருரூவா குடுங்க சாமி! ஆசாமி: நாளைக்குத் தரேன்! பிச்சை: இப்புடீ சொல்லி சொல்லியே இந்த ஏரியாவில் எனக்கு லட்சரூபாய்க்கிட்ட வரணும்!


மாயாவதி, மம்தா, ஜெயலலிதா, சோனியா! இவ்வளவு பேரும் பண்றதைப் பாத்துட்டும்... இன்னும் தாய் நாடுன்னு சொல்லி கன்னத்துல வேற போட்டுக்குறோம்.

நாலாய்ப் பிரித்த மாநிலத்தில், மற்ற மூன்றிலும் என் சிலை ஆளும் - யாரு? யாரோ!!


இலவசமா கிடைக்கிற மிக்ஸி, கிரைண்டரை அம்மா வூட்டுல குடுத்து அஞ்சு வருஷ பஸ் பாஸ் தரச்சொல்லி கேக்கலாமா?


எங்க அப்பா இப்புடி அடிச்சு வளத்திருந்தாருன்னா, இப்புடி இந்த சர்தார்ஜிசளுப்புன்னு இழுத்திருப்பானா? - #யாரு? யாரோ!

திரையுலக வெற்றியை நினைத்தால் பெருமையில் நெஞ்சம் விம்முகிறது # லத்திகா 175வது நாள்!

இனிமே பவர் கட் பத்தி பேசுவ? இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு! அடுத்தவாரம் இருக்குடீ ஆப்பு! #யாரு
யாரோ!


அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்வாழ்க! அப்ப அண்ணா!? போடா வெண்ணை! சமச்சீரை நசுக்கினப்பவே மாத்தியாச்சே ! தெரியாதா? #யாரு? யாரோ!


இனி தமிழில் புது வார்த்தைகள் உருவாகும். ட்விதை, ட்விறுகதை, ட்விச்சுவை, ட்விட்டூழியம், ட்விட்டுரை,..இன்னபிற..!


அப்பா! இன்னிக்கு கிருஷ்ணர் பாப்பா வருவராமே? எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார்? என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே? - சின்ன தேவதை!!


மரியாதையா சீக்கிரம் ரெடியாகுறீங்களா இல்லையா? - வரலட்சுமி நோம்பு மரியாதை!


ஆட்டாம்புழுக்கை போல் ஒரு நாடு ஆட்டம்போடுகிறது. கூட்டணி கொள்ளை காக்க தமிழன் வெட்டுப்பட்ட ஆடாகிறான்! #tnfisherman


திருப்பதியில் எங்களுடன் வரிசையில் வந்த ஆள்..பாவம்! பரம ஏழையாம். 2000 கோடி ரூபாய்தான் வருட வியாபாரம் என்று 8000 டாலர் உண்டியலில் போட்டார்.


வானத்துக்கூரையில பொத்தல் யாரு போட்டுவச்சா? வெளிச்சமெல்லாம் வழியுதுங்க! விண்மீனாப் பொழியுதுங்க!


ட்விட்டுதல் ட்வீட்டர்க்கு அழகு அன்றில் ஃபாலோயர் பத்துக்கும் கீழ்வரும்.


நின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு! அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத! படுத்திருக்கேன்! #கொய்யால

அலைவரிசைத்தொழில் - கலைஞர் ராசா, கொலைவரிசைத்தொழில்- இலைங்கை ராசா! - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா!#tnfisherman


மாட்டுப்பொங்கலும்...மாடில்லாமல் கழிந்தது...! இனிவரும் காலத்தில் தைப்பொங்கல், பொங்கலில்லாமலும் கழியும்!


சட்டைப்பையில் கனமில்லாமல், புத்தகக்காட்சி போகும்போது, மற்றவர்களை கையில் புத்தகக்கனம் பார்த்து....மனம் கனக்கிறது!


கட்டெறும்பை நசுக்கினா, அது அடுத்த ஜென்மத்தில் நம்பளை நசுக்குமாம்! டேய்! போன ஜென்மத்தில் நான் எறும்பு! அது என்னை நசுக்கினுச்சு தெரியுமில்ல?


நான் சோகமாக இருக்கும்போது பாடத்தொடங்குவேன். சுற்றியிருப்பவர்கள் சோகமாகிவிடுவார்கள் #புலம்பல்

எப்போதும் கையில் ஒரு சுத்தியோடே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்! அப்ப கையில் ஆணிகளோட திரிந்தால்?


சீக்கிரமாக எழுந்திருக்கும் பறவைக்குதான் புழு கிடைக்கும். அப்ப சீக்கிரமா எழுந்திருக்கும் புழு? கோவிந்தாவா? #தத்துவ சந்தேகம்!


புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் # புலம்பல்

சென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..!!!


இன்ஸ்பெக்டர் அய்யா! வீட்டுல பூட்டை ஒடைச்சு எடுத்துட்டுப்போயிட்டாங்க! ஒடஞ்ச பூட்டை எடுத்துட்டுப்போய் என்னய்யா பண்ணுவான்?

Thursday, November 24, 2011

பண்பலை அரசியல்





சிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும் நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும், திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.!



இவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார் FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கான விற்பனை அதிகரிக்கலாம். அந்தப்பாடலை அலைபேசியின் அழைப்பு ஒலியாக பலரும் வைத்துக்கொள்ளலாம். அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரிக்கலாம்.

ஆனால், அனைத்து வானொலி நிலையங்களும், எந்தப்படத்தின் இசை வெளியிடப்பட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி ஒலிபரப்ப முயற்சிக்கிறார்களா என்றால், அங்குதான் ஒரு புதுவித அரசியலை அவர்களும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு பெரிய படம், பெரிய இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று மாலையே அந்தப்படத்தின் பாடல்கள் அனைத்து வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டுவிடும். ஒரே நாளில் பத்துமுறை எட்டு சேனலிலும் வந்து கிழித்தெடுக்கும். ஆனால், அதுவே ஒரு சிறிய படம், புதிய இசையமைப்பாளர் என்றால் அவர்கள் ஒலிபரப்புவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ’ அந்தப்படமெல்லாம் ரிலீஸே ஆகாது சார்!’  அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு!”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள்! ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என்றால் ‘ஹி..ஹி..ஹி..!’ அல்லது ’அது கட்டாயம் ரிலீஸ் ஆகிடும் சார்! என்றுதான் பதில் சொல்கிறார்கள்.

இவர்கள் ஏன் இப்படி புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் பாடல்கள் என்பது வேறு ! அதை ஆல்பம் என்கிறோம். அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா! அதாவது , தனிப்பட்ட முறையில், அதிகாரப்பூர்வமாக பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

அதற்கும், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கும் சம்பந்தமே இல்லை.! இதைப்பற்றி கவலைப்படவேண்டியவை தொலைக்காட்சிகள்..! அவர்களால்தான் காட்சி இல்லாமல் பாடலை ஒளிபரப்ப முடியாது. ஆனால், சிறுபடங்களை முற்றிலும் ஓரங்கட்டும் கூட்டமாகவே தனியார் வானொலிகளும் இருக்கிறார்கள்.

80,90 களில், எனக்குத்தெரிந்து, வெளிவராத படங்களின் பாடல்கள் பல பிரபலமாகியிருக்கின்றன. ராமராஜன் நடித்து ‘காவலன்’ என்ற படம் தயாரானது. அதில்தான் பிரபலமான ‘ ஒட்டடை ஒட்டடை கம்பத்துல மாமா!’ எனத்தொடங்கும் பாடல் பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி..! இது பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு! அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா! ‘ போன்ற பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை! இன்னும் பல பாடல்கள் உண்டு.

இன்றும், நான் பார்த்த வகையில், இசை வெளியீட்டு விழா முடிந்து, ஆனால் படம் வெளிவராத பல பாடல்கள் மிகவும் இனிமையான இசையுடன் உள்ளன. ஆனால், அவை மக்கள் கேட்கும் அளவுக்குச் சென்றடையாமல் உள்ளன. காரணம் அவை பிரபலப்படுத்தப் படாததுதான்.!! ‘வர்ணம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது. ஆனால், ஒரு வானொலி கூட ஒலிபரப்பவில்லை.

திரைப்படம் இல்லாமல், திரை இசை இல்லாமல் ஒரு நாள் கூட நமது பண்பலை வானொலிகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. ஆனால், அவர்களும் பெரிய படங்கள், பெரிய இசையமைப்பாளர்கள் என்று சாய்ந்துவிட்டு, பின்னர் சிறிய படங்கள் ஏன் தோற்கின்றன? என்று கேட்டு நேயர்களை SMS செய்யச்சொல்லி, காசு பார்க்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், பல ரேடியோ ஜாக்கிகள் மிகப் பெரிய காரணிகள்.! அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது…! அல்லது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை. அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே! ஆனால், ஒரு சிறு படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டால், அதன் பாடல்களில் ஏதாவது நல்ல பாடல் சிக்கினால், அவற்றை ஒலிபரப்புவதால் எந்த நேயரின் காதும் கெட்டுப்போய்விடாது. இவர்களாகவே முன் முடிவு எடுத்துக்கொண்டு, பாடல்களை ஒதுக்குவது, திரை உலகின் வளரும் எத்தனையோ கலைஞர்களை தன்னால் இயன்றவரை கீழே அழுத்தும் முடிவாகத்தான் இருக்கும். 

இதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. ஒரு நாளில், சிறு படங்களுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதில் 5 முதல் 8 பாடல்களை ஒலிபரப்பலாம். இடையில் அந்தப்படங்களின் விளம்பரங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்த படக்குழுவினரை பேட்டி எடுக்கலாம். இப்படி ஒரு படம் வர இருக்கிறது அல்லது இப்படி ஒரு படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது என்றாவது நேயர்கள் தெரிந்துகொள்வார்கள்.

என் திரையுலக நண்பர் ஒருவர் கூறுவார். ‘கட்டுச்சோத்தை பிரிச்சு வைங்க! ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று! அதுபோல்,  பாடலை ஒலிபரப்பினால், பிடித்தவர்கள் மீண்டும் அழைத்துக் கேட்டுவிட்டுப் போகிறார்கள். தமிழில் நிறையப்பாடல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் வரும். புதிய இசையமைப்பாளர்களும் உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.

எல்லா அனிருத்துக்கும் 3, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிடைத்துவிடமாட்டார்கள். அவர்களையும் அலட்சியப்படுத்தாமல் ஆதரிக்கட்டும் நமது FM வானொலிகள்!

ஏனெனில்…எறும்புகளும் சேர்ந்ததுதான் உயிர்க்கோளம்.!

Wednesday, November 16, 2011

ஓமப்பொடி # 3



சென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
அதன் முன்னோட்டம்….இதோ!

 இந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS)  நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!
                           ***

 சவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டி நடுவர்களால், என் கதைக்குக் கொடுக்கப்பட்ட விமர்சனம் கீழே!

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   
வித்தியாசமான கதைக்களன்கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்நல்ல முயற்சிஆனால் முழுமையடையவில்லை.


மிக அழகாக, நேர்மையாக விமர்சித்திருக்கும் நடுவர் குழுவுக்கு உளமார்ந்த நன்றிகள்!,

போட்டியை நடத்திய பரிசல்காரனின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார்!, ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை! அதைத்தான் ’கண்ணன்’ என்று எடுத்துக்கொண்டேன். அதேபோல், ஒரு கதையில், ஒரே பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பதும் வித்யாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.  துப்பறிவதாகத்தான் கதை இருக்கவேண்டுமா என்று எண்ணியதின் விளைவு….. இப்படி வந்து நின்றது.!
’ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்பது எவ்வளவோ மேல்’ என்ற நினைப்பில் கலந்துகொண்டதால்…...(சரி..சரி.. மீசையில் மண் ஒட்டலை..விடு! )
வெற்றிகரமாக போட்டியை நடத்திய நண்பர்கள் ஆதி மற்றும் பரிசலுக்கு வளமான வாழ்த்துக்கள்!!   
                         
                          ***

’அன்னா கரீனா’, -    டால்ஸ்டாய் - தமிழில் – தர்மராஜன். (Dharmarajan)

தமிழ் இலக்கிய வரலாறு, - டாக்டர் பூவண்ணன்

உயிர்த்தெழு! -             டாக்டர் தமிழ்நாகை

அகிலத்திற்கோர் அருட்கொடை (முகம்மது நபி) – டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி

The Descent of Man, and Selection in Relation to Sex.  – டார்வின்


இவையெல்லாம் நான் கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்கள்… பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து புத்தகங்களின் ஆசிரியர் பெயர்களும் தமிழில் ‘டா’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இதை என்னவென்பது?  ஆங்கிலத்தில் ‘D’ என்று துவங்குவதாகவும் கொள்ளலாம். முதல் புத்தகத்தை எழுதியது தர்மராஜன் எனக்கொண்டால்…!

இவற்றில், அன்னா கரீனா – காட்சிகளும், சம்பவங்களும் புனைவுடன் பிணைத்து எழுதப்பட்ட பிரபலமான கதை!

தமிழ் இலக்கிய வரலாறு – ஒரு அதிவேக ராக்கெட்டில் , தமிழ் இலக்கியங்களைச் சுற்றிய அனுபவம்.!

உயிர்த்தெழு ! – இலங்கை இனவெறியையும், போராட்ட நிலைகளையும் புகைப்படங்களுடன், வரலாறாக முன்வைக்கும் ஆவணம்.

அகிலத்திற்கோர் அருட்கொடை – முகம்மது நபி அவர்களைப் புரிந்துகொள்ள, இயல்பான நடையில் எழுதப்பட்ட சிறந்த நூல்.!

டார்வினின் புத்தகம் , மனித இன வளர்ச்சிநிலைகள், பாலினக் கவர் சாகசங்கள், அது தொடர்பான மனநிலைகள் பற்றிய அவரது 2வது நூல்..! பின்னியிருக்கிறார் மனிதர்!
                     ***

கடந்த ஆறு மாதங்களாக, என் எண்ணுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.
‘சாமி நிகழ்ச்சி பாத்தேன்!. சாமி அப்பாயிண்ட்மெண்ட் வேணும்!’
‘இல்லீங்க அது நான் இல்லை!’
இது பொதுவான உரையாடல்… என்ன குழப்பமென்றால், ஒரு சாமியார், தனது தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் தொடர்புகொள்ளச் சொல்லும் எண்ணாக , என் எண் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடரத்தொடர, ஒரு அழைப்பின்போது நான்..

‘சாமிக்கிட்ட எதுக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்?

’நல்லா ஜாதகம் பாப்பாரு! அதான்! – எதிர்முனை.

ஓஹோ..அவரை நேர்ல பாத்து, முதல்ல தன் செல்போன் நம்பரை ஒழுங்கா பாக்கச்சொல்லுங்க! அப்புறம் ஜாதகம் பாக்கலாம்..!!

-    கட் -

”காசு செலவழித்து, அடுத்தவர் எண்ணைப் போடும் இவர்களையெல்லாம் சீக்கிரம் கூட்டிக்கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்க கறம்பக்குடி பெரிய கருப்பு சாமியோவ்!!”

                    ***

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...