இயற்கை கொடையினைக் காப்போம் !



இயற்கையில் இழந்ததையும்

இழந்ததில் இருப்பதையும்

இருப்பதில் காப்பதையும்

காப்பதில் வாழ்வதையும்,

வாழ்வதில் மடிவதையும்

மடிவதில் முடிவதையும்

பயத்துடன் பகிர்கின்றேன்.



அண்டத்தின் பெருவெடிப்பும்

பூகோளப்பிறப்பெடுப்பும்

புவியியல் புத்தகத்தில்

எப்போதோ கண்டதுண்டு!


பிறந்தபின் பூமியும் 

தன்னைத்தானே செதுக்கியது.

நெருப்புடனே பிறந்துவந்து

காற்று கண்டு

நிலத்தைக் கண்டு

காலம் கடந்து நீரைக்கண்டு

உயிரினங்கள் ஒன்றிரண்டை

ஓடியாட வைப்பதற்குள்

களைத்துப்போன 

இயற்கைக்கு அப்போதே

வயது எழுபது கோடி!


வாழ்வியல் ஓட்டத்தில்

இருப்பியலின் தாக்கத்தில்

தேவைகளின் மாற்றத்தில்

ஒன்றையொன்று சார்ந்துவந்து

உயிரினங்கள் பெருகின!


பெருகிய உயிரினங்களில்

நடந்து வந்து

பேசி நின்று

மூளையெனும் ஆயுதத்தை

முழுமையாகக் கண்டுணர்ந்து

சிந்தித்து செயல்புரிந்து

சிறப்பாக நம்மைக்காப்பான்

என்றெண்ணி இயற்கையும்

மனிதனென்ற உயிரினத்தை

மமதையுடன் படைத்துவிட்டு

மார்தட்டி நின்றது!



வந்திறங்கியவன்

வஞ்சகன் என்றறியா

பித்துமனம் கொண்ட

பேதைத்தாய் இயற்கையும்

பெருஞ்செல்வம் அவனுக்கு

பூமியெங்கும் தந்துவிட்டு

பொறுமை காத்து வந்தது  !



(வழக்கம்போல தொடரும்..!)


16 மறுமொழிகள்:

சந்தனமுல்லை said...

//நின்றுமூளையெனும் ஆயுதத்தைமுழுமையாகக் கண்டுணர்ந்துசிந்தித்து செயல்புரிந்துசிறப்பாக நம்மைக்காப்பான்என்றெண்ணி இயற்கையும்மனிதனென்ற உயிரினத்தைமமதையுடன் படைத்துவிட்டுமார்தட்டி நின்றது//

:-))
நல்லாருக்குங்க கவிதைவரிகளும் படமும்!

நிஜமா நல்லவன் said...

வரிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு....படமும் சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

தலைப்பை புரிஞ்சி நடந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்... இனிமேலும் புரிஞ்சிக்க போறது.....?????

பழமைபேசி said...

சிந்திக்க வைக்கும் கவிதை! நன்று!!

Thekkikattan|தெகா said...

I can see it, a master piece 'poem' on its way...

I enoyed it fully well... continue please.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அருமை சுரேகா நன்று.. தொடருங்கள்..

மங்களூர் சிவா said...

//நின்றுமூளையெனும் ஆயுதத்தைமுழுமையாகக் கண்டுணர்ந்துசிந்தித்து செயல்புரிந்துசிறப்பாக நம்மைக்காப்பான்என்றெண்ணி இயற்கையும்மனிதனென்ற உயிரினத்தைமமதையுடன் படைத்துவிட்டுமார்தட்டி நின்றது//

இன்னுமாய்யா இந்த பூமி நம்பளை நம்பிகிட்டிருக்கு!?!?

:(((((((((((

மங்களூர் சிவா said...

கவிதை சூப்பர் சுரேகா.

நசரேயன் said...

அருமை

பொடியன்-|-SanJai said...

நல்ல கவிதைகள்.. ஆதங்கத்தை அழகாக வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். :)

சுரேகா.. said...

சந்தனமுல்லை said...


:-))
நல்லாருக்குங்க கவிதைவரிகளும் படமும்!

வாங்க சந்தனமுல்லை!
நன்றிங்க!

சுரேகா.. said...

பழமைபேசிக்கு அன்பு நன்றிகள்!

சுரேகா.. said...

வாங்க தெகா அண்ணா..!
இப்படியே சொல்லி சொல்லித்தான்
ரணகளமாகிக்கெடக்கு !

:)

சுரேகா.. said...

வாங்க நிஜமா நல்லவன்..!
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி !

சுரேகா.. said...

வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றிங்க முத்துலட்சுமி-கயல்விழி!


வாங்க சிவா!
நல்லா கதையக்கெடுத்தீங்க!
அது நம்பிக்கைய இழந்து
பல வருஷமாச்சு !
இப்ப இவிங்களை என்ன பண்ணலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கு!

சுரேகா.. said...

வாங்க நசேரயன் !
வருகைக்கு நன்றிங்க !

வாங்க சஞ்சய்!
எல்லாம் உங்கள மாதிரி
அன்பு நண்பர்கள்
பாராட்டுலதான் ஓடிக்கிட்டிருக்கு!

Blog Widget by LinkWithin