Tuesday, August 10, 2010

நியாயம்!


அநியாய
நேரக்கணக்கில்
அதிகத்தொகை
பார்க்கிங்!

சில்லறை
பாக்கிக்காக
பிச்சைக்காரனாக்கும்
நடத்துனர்!


அசராமல்
அடாவடி
தொகை கேட்கும்
ஆட்டோ!

நோட்டீஸில்
அன்பாக
மிரட்டி
வாங்கும் பள்ளி!

யாவும் கண்டு
பொருமினாலும்,
யாராவது
கேள்வி கேட்பார்களென
பாராமல் இருந்ததால்
மாறாமலே இருக்கிறது!


இனிமேல் நானும்
இறப்புச் சான்றுக்குக்கூட
வாங்கவேண்டிய
லஞ்சத்தை
கூட்டித்தான் ஆகணும்.!

4 comments:

  1. சில்லறை
    பாக்கிக்காக
    பிச்சைக்காரனாக்கும்
    நடத்துனர்!
    supper

    ReplyDelete
  2. சில்லரை

    பாக்கி கொடுக்காமல்

    கௌரவ பிச்சைக்காரனாக

    நடத்துநர்

    ReplyDelete
  3. வாங்க யாதவன்..நன்றி!

    ReplyDelete
  4. வாங்க டி.வி.ராதாகிருஷ்ணன் சார்!!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...