Friday, September 30, 2011

நியாய நாய்







விபத்து நடந்து,
வினாடிகளில்
காணாமல் போகும்
நகைகளில்,
தொகைகளில்
இருக்கிறது
மனிதாபிமானப்
பிசாசுக்கும்
சுயநல
தெய்வத்துக்குமான
அமைதிப் போரின்
அநியாய வெற்றி!

வெற்றியின் ருசியில்


நாளைய 
விபத்துக்காய்

நாக்கைத்

தொங்கப் போடுகிறது

நியாய நாய்!









3 comments:

  1. நல்ல கவித்துவமான கற்பனை ..நிஜத்தை இணைத்து பாக்கும் பொழுது
    மனசு வலிக்கும் ஏன் இப்படி செய்றாங்கன்னு .

    நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

    ReplyDelete
  2. வாங்க இளைய தாசன்..

    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அன்பின் சுரேகா - கவிதை நன்று - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...